பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழா- சி.சி.எல் டி.20.


"எர்த் 2 மார்ஸ்" என்ற தனியார் நிறுவனம் தமிழக அளவில், கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்த உள்ளது.

தமிழகம் முழுவதுமாக மொத்தம் 8 மண்டலங்களில் இருந்து 16 கல்லூரி அணிகள் 'சி.சி.எல். டி.20' விளையாட்டுப்போட்டியில் விளையாட உள்ளன. இதன் முதற்கட்டமாக, கோவை மண்டலத்தை சேர்ந்த 34 கல்லூரிகள் தங்கள் அணிகளை போட்டிக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் இருந்து 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த தகுதிச்சுற்று போட்டி வரும் நவம்பர் மாதம் 2வது வாரம் தொடங்க உள்ளது.

கோவை மண்டலத்திற்கான போட்டிகள் பி.எஸ்.ஜி கலை கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி சாலையில் உள்ள ரேடியோ மெர்ச்சி அலுவலகத்தில் நடை பெற்றது. இதில், ரேடியோ மெர்ச்சி பண்பலையின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அஜித் கிருஷ்ணா, சிம்ப்ளிசிட்டி செயலியின் முதன்மை தலைமை அதிகாரி ஆண்ட்ரு சாம் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.





தொடந்து பி.எஸ்.ஜி. கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் இது குறித்து கூறுகையில், 'எங்கள் போன்ற மாணவர்களுக்கு, இது ஒரு சிறந்த அடித்தளம். இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளோம். கல்லூரியில் நடக்கும் தேர்வு பாதிக்காத வகையில் போட்டிகளை நடத்த உள்ளது மிகுந்த மகழ்ச்சியாக உள்ளது' என்றார்.



"சி.சி.எல். டி.20" போட்டியில் உங்கள் கல்லூரி கிரிக்கெட் அணியை இணைத்துக்கொள்ள: 9629441991 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...