தாய்லாந்தில் அடுத்த அரசர் முடிசூடுவதற்கு முன் குறைந்தது 15 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; பிரதமர் பிரயூத் தகவல்

தாய்லாந்து நாட்டில் அரசர் பூமிபோல் அதுல்யதேஜ் மறைவிற்கு குறைந்தது 15 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் பிரயூத் சான்-ஓச்சா இன்று கூறியுள்ளார்.  இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரயூத், அரசியலமைப்பின்படி அடுத்த அரசர் தேர்வு பற்றிய விவகாரத்தில் தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் குடிமக்கள் கவலை கொள்ளவோ அல்லது அதனை கருத்தில் கொள்ளவோ கூடாது.

குறைந்தது 15 நாட்கள் இரங்கலுக்கு பின், அரசியலமைப்பின் பிரிவு 23ஐ நடைமுறைப்படுத்துவதென்பது சரியான நேரம் ஆக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக அரசாட்சி நடத்திய அரசர் பூமிபோல் கடந்த வியாழ கிழமை தனது 88வது வயதில் மரணம் அடைந்துள்ளார்.  இளவரசர் வஜீராலாங்கோர்ன் முடிசூடும் நிகழ்ச்சி அவரது தந்தை தகனத்திற்கு பின் நடைபெறும் என கடந்த வாரம் பிரதமர் கூறினார்.  எனினும், அதிகாரபூர்வ முறையில் முடிசூடுவதற்கு முன்பே, இளவரசர் அரசராக முடியும்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...