நடனத்தின் ஈர்ப்பால் கல்லூரி மாணவர் தற்கொலை


திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன் (18). இவர் கோவை காலப்பட்டியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பிஎஸ்.சி இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். நடனத்தின் மீது அளவுகடந்த ஆர்வம் இருந்த இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காலில் பலத்த காயமடைந்த அவர் தொடர்ந்து நடனத்தில் ஈடுபட முடியவில்லை. 

இதனால் மனவேதனையில் காணப்பட்ட மோகன் ஞாயிறன்று இரவு அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த சக மாணவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சிங்காநல்லூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சகமாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அக்கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...