காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்வு

காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல்  முஜாகீதின் பயங்கரவாத இயக்க தளபதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு கடும் வன்முறை வெடித்தது. பிரிவினைவாதிகளும் முழு அடைப்பு மற்றும் வன்முறையை தூண்டி விட்டதால் பாதுகாப்பு படையினர் இடையே போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், அங்கு தற்போது நிலமை முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் ஒன்றாக கூடுவதற்கு தடை இன்னும் நீடிக்கிறது.  

பதட்டமான பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரிப்பெய்டு மொபைல் போன்களில் அவுட் கோயிங் அழைப்புகளுக்கு இருந்த தடையும் விலக்கி கொள்ளப்பட்டது. மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இருப்பினும், செல்போன் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. 

இருந்த போதிலும், 99 வது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியே உள்ளது.  காஷ்மீரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஜாமியா மஸ்ஜித் மசூதி 14 வாரங்களாக மூடப்பட்டுள்ளது. மசூதிக்கு செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

Newsletter

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...