சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியில் சுமார் 500-க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பேரிட இன்னல் குறைப்பு குறித்த விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு பெரும் விதமாக நகரின் முக்கிய வீதி வழியாக சென்று வ.உ.சி மைதானத்தை சென்றடைந்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ஆம் நாள் சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, தீயில் இருந்து பாதுகாத்துகொள்ளுதல் ஆகிய சம்பங்களிலிருந்து பொதுமக்கள் எந்தவித பாதிப்புமின்றி தங்களை காத்துக்கொள்வதே இதன் நோக்கமாகும். வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியதையொட்டி மாவட்டத்தில் எவ்வித பாதிப்புகள் வராத வண்ணம் முழுமையாக கண்காணித்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தங்குவதை முன் கூட்டியே தெரிந்து தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்திடும் அளவிற்கு வாய்க்கால் பகுதிகளை சீர் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளும் வகையிலும் மற்றும் பொதுமக்கள் மழைக்காலங்களில் காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்தி எல்லோரும் சுகாதாரத்தை பாதுகாத்திடவும் மேலும் பொதுமக்கள் அனைவரும் பேரிடர் காலங்களில் தன்னைத்தானே காத்துக்கொள்வது மட்டுமின்றி குழந்தைகள், முதியோர்கள் ஆகியோரை எந்தவித பாதிப்புமின்றி பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் தெரிவித்தார். 

இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ், பயிற்சி ஆட்சியர் பிரியங்கா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)சிதம்பரம் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...