நவராத்திரி முடிந்தாச்சு, மாநகராட்சிக்கு வேலை வந்தாச்சு..!

தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக நவராத்திரி தினங்களும், விஜயதசமியும் கொண்டாடப்பட்டு வந்தது. இதற்கென மக்கள் அதிகளவில் பழவகைகளை வாங்கி படையலிட்டு வழிபட்டு வந்தனர். இதனால், சாலையெங்கிலும் பழ வியாபாரிகளும், பூ வியாபாரிகளும் அதிகளவில் காணப்பட்டனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையுடன் பண்டிகை தினங்கள் முடிவடைந்ததையொட்டி சாலையோர வியாபாரிகள் விற்பனை ஆகாமல் மீதமான காய்கறிகள், பழவகைகளை சாலையிலேயே கொட்டிச் சென்றனர். மேலும், பல வணிக நிறுவனங்கள் தங்களது கடை மற்றும் நிறுவனங்களின் முன் உடைத்த பூசணிக்காய்கள் அதிகளவில் சாலையில் தேங்கின.

இதனை சுத்தப்படுத்தும் வகையில், மாநகராட்சியின் சார்பில் 20 டன் கொள்ளளவு கொண்ட 4 கண்டைனர் லாரிகள், 10க்கும் மேற்பட்ட திறந்த நிலை லாரிகள், 3 டன் கொள்ளளவு கொண்ட 7 லாரிகள், 5 டன் கொள்ளளவு கொண்ட 15 கண்டைனர், 4 ஜேசிபி என சுமார் 35க்கும் மேற்பட்ட வாகனங்களும், 65க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பூ மார்க்கட், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட பனியில் 225 டன் காய்கறி, பழவகை கழிவுகளை சாலையில் இருந்து அகற்றினர். 

இதுகுறித்து சுகாதார அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த சுத்தப்படுத்தும் பணியில் மத்திய பகுதியில் 32 பணியாளர்களும், மேற்கு மண்டலத்தில் 30 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து, இரவு பகலாக தங்களது பணியினை மேற்கொண்டு வருகின்றனர் என்றார். மேலும், இந்த இயற்கை கழிவு பொருட்கள் மண்புழு உரமாக்கல் ஆலைக்கு அனுப்பப்பட உள்ளது என்றார்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...