தீவிபத்தில் புதுப்பெண் உட்பட இரு பெண்கள் பலி

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி வசந்தா (22). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி தனது வீட்டில் உள்ள மண்ணெண்னை அடுப்பை வசந்தா பற்ற வைக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக தீ அவர் மீது பரவியது. அவரின் கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தினர் வசந்தாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பலியானார். இது குறித்து வழக்கு பதிந்த போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மற்றொரு சம்பவம்

கோவை கண்ணப்ப நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி சுகந்தி (37). சம்பவத்தன்று சுகந்தி தனது வீட்டில் இருந்த மண்ணெண்னை அடுப்பை பற்றவைக்கும் போது, அவர் மீது  தீ பரவியது. தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...