ஓசையின் சார்பில் நடைபெற்ற 13வது காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி இன்று நிறைவு பெற்றது

தன்னார்வலர் அமைப்பான ஓசையின் சார்பில் கோவை கோட்ட தமிழ்நாடு அரசு வனத்துறை, மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து 13வது காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அக்டொபர் 4ம் தேதி முதல் தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற்றது. 

இந்தக் கண்காட்சியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு, அரியவகை பறவை மற்றும் விலங்கு இனங்கள், வண்ணத்து பட்டாம்பூச்சி உள்ளிட்டவற்றின் புகைப்படங்களும், மனித விலங்கு மோதல் குறித்தான படங்களும் இடம்பெற்றிருந்தன. உயிர் நிழல் 2016 என்ற இந்நிகழ்ச்சியின் தொடக்க நாள் முதல் அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து கண்டு ரசித்துச் சென்றனர். 

இந்தக் கண்காட்சியின் நிறைவு நாள் அக்டோபர் 9ம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு. இராமசாமி தலைமையில் நடைபெற்ற இதில், வேளாண்மை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சக்திவேல் வரவேற்புரை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஓசை அமைப்பின் அமைப்பாளர் ச. அகிலா நன்றியுரை வழங்கினார்.

முன்னதாக கண்காட்சி நாட்களில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, விடாடி வினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வெற்றிபெற்றோர்க்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...