சைக்கிள சும்மா நிறுத்தாதீங்க..! உடனே கால்பண்ணுங்க ரேடியோ சிட்டிக்கு...

பெரும்பாலான மக்கள் தங்களின் தேவைக்காக வாங்கப்பட்ட சைக்கிளை ஒருக்கட்டத்தில் பயன்படுத்த முடியாமல் வீட்டிலேயே வைத்து விடுவது வழக்கம். அவ்வாறாக தேக்கப்பட்ட சைக்கிள் நீண்ட நாட்களுக்குப்பின் பயன்படுத்தவே முடியாத நிலைமைக்கு வந்து விடுகின்றது.



இவ்வாறாக பயனற்று கிடக்கும் சைக்கிளை அதனை வாங்க முடியாமல் இருக்கும் மக்களுக்கு குடுத்து உதவும் வகையில் ரேடியோ சிட்டி வானொலி நிறுவனம் ஒரு திட்டதை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனற்று கிடக்கும் சைக்கிள் குறித்து அதன் உரிமையாளர் தெரியப்படுத்தினால் அவரின் வீட்டுக்கே சென்று அந்த சைக்கிளை கைப்பற்றி இல்லாதவர்க்கு கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தினை கடந்த மாதம் கோவை மாநகராட்சி மேயர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

பயனற்று உள்ள சைக்கிளை மீட்டு இல்லாதவர்களுக்கு குடுத்து உதவும் வகையில் ரேடியோ சிட்டி 91.1 வானொலி நிறுவனத்தின் சார்பில் ''ரீசைக்கிள்'' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் பயனற்றுள்ள சைக்கிள் குறித்து தெரியப்படுத்தினால் அவர்களின் வீட்டுக்கே சென்று அந்த சைக்கிளை கைப்பற்றி சீரமைக்கப்பட்டு பின் அதன் பயன்பாடு உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறாக கடந்த தினங்களில் கோவை உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.



மேலும் இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் பயனற்றுள்ள சைக்கிளை கொடுக்க +91 422 663 9911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.







Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...