ஒரே நாளில் ரூ.1400 கோடிக்கு விற்பனை: பிலிப்கார்ட் சாதனை

புதுடில்லி: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட், பண்டிகை காலத்தை முன்னிட்டு "பிக் பில்லியன் டே" விற்பனையை அக்டோபர் 3ம் தேதி நடத்தியது. இதில் ஒரே நாளில் ரூ.1400 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிகமானவர்கள் ஆர்டர் செய்ததன் காரணமாக இந்த அளவிற்கு விற்பனை அதிகரித்ததாகவும், 2015ம் ஆண்டு 5 நாட்களில் ரூ.2000 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் பிலிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல புதிய வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கியதன் காரணமாக இந்த வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக பிலிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.

அதிக வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் புக் செய்தாலும் டிராபிக், லோடிங் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பிலிப்கார்ட் நிறுவனம் முன்னேற்பாடுகளை செய்திருந்தது. இதனால் எந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் எட்ட முடியாத விற்பனை சாதனையை பிலிப்கார்ட் நிகழ்த்தி உள்ளதாக அதன் தலைவர் அரவிந்த் சிங்கால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இனி வரும் காலங்களில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை கால சலுகை அறிவிக்கப்பட்ட பிறகு பிலிப்கார்ட்டில் 40 மில்லியன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு பண்டிகை கால விற்பனையில் 80 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களை விற்பனை செய்து 3 மடங்கு அதிகமாக விற்பனை சாதனையை அமேசான் நிறுவனம் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...