காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு செப்டம்பர் 30-ம் தேதி தான் பிறப்பித்த உத்தரவை, மத்திய அரசின் வாதத்தை அடுத்து, நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு, மத்திய அரசின் வழக்கறிஞரும் ஒப்புதல் தெரிவித்தார். இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் அக்டோபர் 3-ம் தேதி தாக்கல் செய்த மனுவில், மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்ற வரம்புக்கு உட்பட்டது என்றும், உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தது. மேலும், ஏற்கெனவே இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணையில் உள்ள நிலையில், இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசின் வாதத்தில் ஓரளவு நியாயம் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், மேலாண்மை வாரியம் அமைக்க தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், ஆனால் ரத்து செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

அடுத்த விசாரணை, அக்டோபர் 18-ம் தேதி, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு நடைபெறும் எனறும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, மத்திய அரசு தொழில்நுட்ப நிபுணர் குழுவைக் கொண்டு இரு மாநிலங்களிலும் கள ஆய்வு நடத்தி, 17-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், 6-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் ஒப்புக்கொண்ட நிலையில், 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தினசரி 2 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...