சசிகுமார் கொலை: சிபிசிஐடி போலீஸ் சந்தேகிக்கும் நான்கு நபர்கள்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் படுகொலை வழக்கில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், 8 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். 

ஆனால் காவல் துறையினர் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதை அடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறை விசாரணைக்கு மாற்றி காவல் துறை தலைவர்ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து கோவைக்கு வருகை தந்த சி.பி.சி.ஐ.டி பிரிவுஏ.டி.ஜி.பி கரண் சின்ஹா மேற்கு மண்டலகாவல் துறையினரிடம் வழக்கு தொடர்பானஆவணங்களை பெற்றுக் கொண்டு விசாரணையை துவக்கினார். இதையடுத்து சசிகுமார் செல்போன் அழைப்புகள் மற்றும் கொலை நடந்த நாளான்று கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து சுப்பிரமணியபாளையம் வரை சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடந்தி வந்தனர். 

இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் சசிகுமார் கொலை வழக்கில் சந்தேகப்படும் படியாக நடமாடிய நபர்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான முக்கியமான 14 புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களில் உள்ள நபர்கள் குறித்த தகவல்களை சிபிசிஐடி காவல் துறையினருக்கு தெரியபடுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள காவல் துறையினர், [email protected] மின்னஞ்சல் முகவரியிலும் தெரியபடுத்தலாம் என அறிவித்துள்ளனர்.











Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...