ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு கோவையில் மேலும் 11 பேரிடம் விசாரணை


கோவை உக்கடத்தில் ஐ.எஸ் .ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் NIA அமைப்பினர் உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த நவாஸ், நவாஸ்கான், உபைதுல் ரஹ்மான்,நபியுல்லா மற்றும் அபுதாகீர் ஆகிய 5 பேரிடம்  மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் 3 குழுக்களாக இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று மேலும் மூவரை கமிஷ்னர் அலுவலகத்திற்கு அழைத்து வந்த NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 பேரிடமும் தனித்தனியாக விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் 8பேரின் பாஸ்போட் ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.கேரளாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த அபுபசீர் என்பவருடன் முகநூலில் இந்த இளைஞர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், முகநூலில் இவர்கள் இடையே நடந்த உரையாடல்களை கைப்பற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

கோவை கமிஷ்னர் அலுவலகத்தை தவிர ரகசிய இடத்தில் வைத்து மேலும் மூன்று இளைஞகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கோவையில் மட்டும் மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால் இதுவரை நடந்த விசாரணையில் முக்கியதகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...