மேகி நூடுல்சை அழிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: தேக்கி வைக்கப்பட்ட, 550 டன் நுாடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்க, நெஸ்லே நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிகளவு காரீயம்:

நெஸ்லே இந்தியா நிறுவன தயாரிப்பான மேகி நுாடுல்சில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காரீயம் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் அனைத்து வகை மேகி நுாடுல்ஸ் பாக்கெட்டுகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதிக்க, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டது.

விற்பனைக்கு தடை:

பரிசோதனையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகளவில் கலந்திருப்பது உறுதியானதால், அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள நெஸ்லே நிறுவன கிட்டங்கிகளில், 550 டன் மேகி நுாடுல்ஸ் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

அழிக்க உத்தரவு:

தற்போது, இந்த நுாடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, 38 ஆயிரம் டன் நுாடுல்ஸ் பாக்கெட்டு கள், சிமென்ட் உற்பத்தி தொழிற்சாலையில் எரிபொருளாக பயன்படுத்தி அழிக்கப்பட்டதாக, நெஸ்லே நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...