மாணவன் ஆற்றில் மாயம்: 2 நாள் கழித்து வழக்குப்பதிவு

ப.வேலூர்: ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில், நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருக்கும் போது, மாயமான கல்லூரி மாணவனை, மூன்றாவது நாளாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் ஹரிஹரன், 18. இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில், பி.டெக்., இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 1ம் தேதி, தன் நண்பர்கள், ஆறு பேருடன், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் குளித்தார். அவரது நண்பர்கள் கரைக்கு திரும்பிய நிலையில், ஹரிஹரன் மட்டும் கரைக்கு திரும்பாமல் மாயமானார். இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஜேடர்பாளையம் போலீசார் மீனவர்களின் உதவியுடன் மாணவனை தேடினர்.

பின், நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள், ப.வேலூர் காவிரி ஆற்றின் இருகரையோரங்களில், நான்கு பரிசல்களில் தேடினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...