கிராமப்புற மலைவாழ் மக்களிடம் இலவச பட்டா வழங்குவதாக கூறி மோசடி

கோவையில் உள்ள மடக்காடு, தாணிக்கண்டி மற்றும் முள்ளாங்காடு கிராமப் பகுதிகளில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் ஈஷா யோகா மையத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தன்னுடைய சுபலாபத்திற்காக எங்களை பயன்படுத்திய சிவசண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


ஈஷாவிற்கு அருகில் உள்ள மடக்காடு, தாணிக்கண்டி மற்றும் முள்ளாங்காடு ஆகிய கிராமப் பகுதிகளில் மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். ஈஷா யோகா மையம் இப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதி, வேலைவாய்ப்பு வசதி, கல்வி உதவி என அனைத்து உதவிகளும் செய்து வருகின்றனர். இப்படி ஈஷா யோகா மையத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன்  கோவை பகுதியைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர் தன்னை பத்திரிக்கை நிருபர் என்றும், உங்கள் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அரசாங்கத்திடம் இருந்து பெற்று தருவதாக கூறி எங்கள் பகுதி மக்களிடம் ரூ.2500 பணம் வாங்கிக்கொண்டு இதுவரைக்கும் வீட்டுமனை பட்டா வாங்கித் தராமல் ஏமாற்றி வருகிறார்.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஈஷா யோகா மையம் எங்கள் கிராமத்தில் 43 ஏக்கர்  நிலத்தை ஈஷா அறக்கட்டளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. என்று பொய்புகார் அளித்து எங்களை பயன்படுத்தியுள்ளார். மலைவாழ் பழங்குடியினர் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தன்னுடைய சுபலாபத்திற்காக எங்களை பயன்படுத்திய சிவசண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...