ஆதரவற்றோர்க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக்!

கோவை: பேக்கரி செயின் ஆன் தி பிரெஞ்ச் லோஃப் நிறுவனம் கோவையில் புரூக் பீல்ட் மாலில் முதல் முறையாக 600 கிலோ எடையுள்ள மிக நீளமான போட்டோ கேக் தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஓரியண்டல் குசீன்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மகாதேவன் மற்றும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரெனால்டு பெர்னாண்டஸ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் மற்றும் அவருடைய மகள் சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இசைநிகழ்ச்சி நிகழ்த்தினர். இசை நிகழ்ச்சியை பொதுமக்களை அனைவரும் கவர்ந்தது. 





நிகழ்ச்சியில், டீன் பவுண்டேஷன் மற்றும் சங்கர கண் மருத்துவமனை ஆகியவற்றிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட 'டான் உதச்வ்' ன் ஒரு பகுதியாக 60 மீட்டர் நீளமும், 600 கிலோ எடையுள்ள கேக் தயாரிக்கப்பட்டு, இசை உலகில் தென்னிந்தியாவின் பிரபலம் மற்றும் ஜாம்பவான்களின் நினைவாக இக்கேக் அர்பணிக்கப்பட்டது.





இதில் 600க்கும் மேற்பட்ட ஜாம்பவான்களின் புகைப்படங்களை கொண்டு இந்த கேக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கின் மூலம் வசூலாகும் பணத்தை தனிநபரின் மருத்துவ உதவிக்கும் மற்றும் நலிந்த பிரிவை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கும், ஆதரவு அளித்து வரும் டீன் பவுண்டேசன் மற்றும் சங்கர கண் மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படும்.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....