மரபணு மாற்ற கடுகு விதையை அனுமதிக்க எதிர்ப்பு: வலுக்கும் போராட்டம்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை வகைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

'விதை சத்தியாகிரகம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த போராட்டம், தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இந்த போராட்டங்கள் இந்திய அளவில் 145 இடங்களிலும், அவற்றில் தமிழகப் பகுதிகளில் மட்டும் 45 இடங்களில் நடைபெற்றதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய விவசாயி பார்த்தசாரதி தெரிவித்தார்.

சென்னையில் இந்த போராட்டங்களுக்கு இடையே பாரம்பரிய விதை திருவிழா ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்திய திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் கூட இந்த போராட்டங்களில் பங்கேற்றார்கள்.

அந்த வகையில் தேசிய விருதுகளை பெற்றுள்ள இயக்குனர் வெற்றிமாறன், இன்று சென்னையில் நடைப்பெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொண்டனர். இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், சாமானியர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதால் தான் இந்த போராட்டத்திற்கு துணை நிற்பதாக கூறினார்.



மரபணு மாற்று கடுகு விதைகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தவறான அணுகு முறையை கடைப்பிடிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

2010-ஆம் ஆண்டு இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக மத்திய அரசு அந்த திட்டத்தை கைவிட்டது.



இதே போன்ற விவகாரங்கள் தொடர்கதையாக தொடர்வதை ஏற்க முடியாது என்று இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் திரைப்பட நடிகை ரோகிணி தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...