வேட்பாளர்களை மாற்றக்கோரி திமுகவில் தொடரும் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி தேர்தலில்  கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு, கட்சியில் பணியாற்றாதவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறி கோவை மாவட்ட அலுவலகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 53வது வார்டுக்கு திமுக சார்பில்  சாந்தாமணி என்பவர் போட்டியிடுதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் கட்சிக்கு சம்பந்தமில்லாதவர் என்றும், கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட வட்ட கழக செயலாளர் சசிகுமார் மனைவி ஸ்ரீபிரியாவுக்கு சீட்டு வழங்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட திமுகவினர் வடகோவை அருகே உள்ள மாவட்ட அலுவலகத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே,  வட்ட செயலாளர் முருகேசன் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி கழக செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திக் அதிமுக அமைச்சர் வேலுமணியிடம் பணத்தை பெற்றுக் கொண்டு 39வது வார்டுக்கு அறிமுகம் இல்லாத காங்கிரஸ் வேட்பாளரை போட்டியிட வைப்பதாக குற்றச்சாட்டினார். இதேபோல் 55வது வார்டுக்கும் கட்சியில் பணியாற்றாதவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அந்த வார்டு பிரதிநிதி எத்திராஜ் என்பவரும் புகார் தெரிவித்தார். இதற்கிடையே, மாவட்ட செயலாளர் நாச்சிமுத்துடன், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற 39வது வார்டு செயலாளர் முருகேசன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...