மார்பக புற்று நோய் பற்றிய புதிய கருவி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை


ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சையில் சாதனை படைத்து வருகிறது. உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் மார்பக புற்று நோய் பற்றிய புதிய கருவி வெளியிடப்பட்டது.

புற்றுநோய்மையத்தின்இயக்குனரும், தலைமைமருத்துவருமானமருத்துவர்குகன்இந்தகருவியைபற்றிக்கூறுகையில்:

ஆண்டு தோறும் பிங்க் மாதம் என்று அழைக்கப்படும் அக்டோபர் மாதத்தில் உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்று நோய் சிகிச்சை மையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இதுவரை மக்களிடையே 12000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்த 13 ஆண்டுகளாக, மார்பகம் பற்றிய விழிப்புணர்வு கையேடு, இலவச மேமோகிராம், குறும்படம் வெளியிடுதல்,  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.



தற்போது, இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கும் இன்று ஒரு புதிய சாதனையாக மார்பக புற்று நோய் பற்றிய பொதுமக்கள் அனைவரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் ஒரு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி, ஒரு பிங்க் நிறமான 8 ஜி.பி திறன் கொண்ட சிலிக்கான் யு.எஸ்.பி கைப்பட்டை ஆகும்.இது வளையல் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மார்பக புற்று நோய்  பற்றிய அதிவேகமான தெளிய இணையதள இணைப்பு, கைபேசி, அலைபேசியில், எளிதாக கொண்டு சேர்க்கக்கூடிய மொபைல் அப்பிளிக்கேஷன் இணைப்பு, பார்க்க புற்று நோய் பற்றிய வீடியோ, ஆரம்ப நிலையில் மார்பக கட்டிகளை பரிசோதனை செய்தல் மற்றும் ஆரம்ப நிலையில் மார்பக புற்று நோய்களை கண்டறிதல் முக்கியத்துவம் வலியுறுத்தும் குறும்படம், இணையவழி புத்தகம் என்னும் மார்பக புற்று நோய்  பற்றிய தாவல் திரட்டு. 

இந்த கைப்பட்டையை இலவசமாக மகளிர் சுயஉதவிக்குழு, மகளிர் மன்றங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், கிராமப்புற மகளிர் மன்றங்கள், மகளிர் கல்லூரி ஆகிய அமைப்புகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதோடு, வழக்கம்போல் இம்மாதம் இலவச மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் மேமோகிராம் போன்ற பரிசோதனை நடக்கும். புற்று நோயை முறியடிப்போம் என்றார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...