ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த தகவலை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ரேஹன் எஸ்.பெல் என்பவர் குடியரசு தலைவரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

டெல்லி: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு ஒரு வாரம் தாண்டிவிட்டது. அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியாகவில்லை என்றபோதிலும், காவிரி தொடர்பாக அவர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்ட போட்டோவும் வெளியாகாதது எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதியை அறிக்கை வெளியிடும் அளவுக்கு தூண்டியது.
இதை தொடர்ந்து, நேற்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா உடல் நலம் குறித்து உரிய தகவலை வெளியிட வேண்டும். ஆளுநர் தலையிட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.

குடியரசு தலைவருக்கு மனு:
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள ரேஹன் எஸ்.பெல் என்பவர், இதுகுறித்து குடியரசு தலைவருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். தமிழக ஆளுநரிடமிருந்து, ஜெயலலிதா உடல் நிலை குறித்த அறிக்கையை கேட்டு பெற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்: 
எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அல்லது தனியார் டாக்டர்கள் மூலம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து, அதன் விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வசதி செய்ய வேண்டும் என்றும் ஹேரன் எஸ்.பெல் தனது மனுவில் கோரியுள்ளார்.

குடியரசு தலைவர் ஆட்சி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பணியாற்றும் செயல் திறனோடு உள்ளாரா என்பதை ஆளுநர் மூலம் குடியரசு தலைவர் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி, அவருக்கு செயல் திறம் இல்லை என தெரியவந்தால், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக அரசை கலைக்க வேண்டும். குடியரசு தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அறிக்கை அவசியம்:
ஒருவேளை இந்த மனுவை குடியரசு தலைவர் பரிசீலித்தாலும், முதலில் ஆளுநரிடம் அறிக்கை கேட்காமல் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளதாக தெரிந்தால்தான் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும். ஆனால் முடங்கிவிட்டதாக யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு அரசு சார்பில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...