இந்தியா - பாகிஸ்தான், விமான போக்குவரத்து நிறுத்தம்?

புதுடில்லி: யூரி தாக்குதல், சிந்து நதி ஒப்பந்த விவகாரம் ஆகியவற்றிற்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நேரடி விமான போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது பாகிஸ்தான், எல்லைக்குள் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளிடையே இயக்கப்படும் விமான போக்குவரத்து தொடர்பான விபரங்களை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கலாம் அல்லது தாழ்வாக பறக்க அனுமதி வழங்கலாமா என்பது குறித்து விமான போக்குவரத்து துறையிடம், பிரதமர் அலுவலகம் கருத்து கேட்டுள்ளது. விமான போக்குவரத்து துறையும் அனைத்து விபரங்களை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது.

பாகிஸ்தான், விமானங்களுக்கு அனுமதி அளிக்கலாமா அல்லது தடை விதிக்கலாமா என்பது குறித்த இறுதி முடிவை பிரதமர் அலுவலகம் தான் எடுக்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் 2001ம் ஆண்டு, இந்திய பார்லி., கட்டிடம் மீதான தாக்குதலின் போது இரு நாடுகளிடையே விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...