காவிரியில் நீர் திறந்துவிடக் கோரி தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




காவிரியில் இருந்து தமிழக அரசுக்கு நீர் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்திற்கு நீர் திறந்து விடவில்லை. இதை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 




அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் நாகேந்திர குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 
காவிரியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்  500 டி.எம்.சி வரை நீர் பெற்ற தமிழகம், தற்போது 60 டி.எம்.சி வரை கூட பெற முடியவில்லை. காவிரியை நம்பி தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடக அரசு செயல்படுகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...