ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்: மேலும் சில நாட்கள் மருத்துவமனையில்

உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் தேதியன்று இரவு உடல் நலக் குறைவின் காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா க்ரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவின் காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை கூறியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இதற்கு முன்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலும் முதல்வர் நலம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு முதல்வரின் உடல்நலம் குறித்து செய்திகள் ஏதும் வெளியாகாத நிலையில், மாநிலம் முழுவதும் வதந்திகள் பரவின.

இந்த நிலையில் வியாழக்கிழமையன்று இரவில் அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வரின் உடல்நலம், நன்றாகத் தேறிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...