பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கென தீபாவளி ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன்படி, தமிழக அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் ஊக்கத்தொகைப் பெறத் தகுதியானவர்கள் குறைந்தபட்சம், 8400 ரூபாயும், அதிகபட்சமாக 16,800 ரூபாயும் பெறுவர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை தனியார் மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதியன்று இரவு உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது.

அவரது உடல் நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில், அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் தெரிவித்தது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...