இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 477 ஆமைகள் மீட்பு

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 477 ஆமைகளை மீட்டுள்ளதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் சிலவற்றை இலங்கைக்கும் வேறு நாடுகளுக்கும் கடத்தவிருந்ததாக கிடத்த தகவலையடுத்து, மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தூத்துக்குடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கீழ வைப்பார் கிராமத்தை நோக்கிச் சென்ற ஒரு வாகனத்தை வழிமறைத்துச் சோதனையிட்டனர்.

அந்த வாகனத்தில் இருந்த 23 பெட்டிகளில் இருந்து 477 உயிருள்ள ஆமைகள் மீட்கப்பட்டதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. அந்த வாகனத்தில் இருந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.



கைப்பற்றப்பட்ட 477 ஆமைகளில் 473 ஆமைகள், மிகவும் அழியும் அபாயத்தில் உள்ள spotted black terrapin உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது.

இவற்றில் சில வெளிநாடுகளில் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. சில ஆமைகள் உணவாகவும் பயன்படுகின்றன.

இதற்குப் பிறகு இந்தக் கடத்தலுக்குப் பின்னணியில் இருந்த நபர் மதுரைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார்.

இந்த ஆமைகள் வடஇந்தியாவிலிருந்து சாலை வழியாகக் கடத்திக்கொண்டுவரப்பட்டு, சென்னையில் வளர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியிலிருந்து இந்த ஆமைகள் நாட்டுப் படகின் மூலம் இலங்கைக்கு அனுப்பி, பிறகு அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததாக கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஆமைகள் அனைத்தும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...