கண்ணை கவரும் பூம்புகார் கொலு பொம்மைகள் கண்காட்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனையை பூம்புகார் விற்பனை நிலையம் துவங்கி உள்ளது.
இக்கண்காட்சியினை கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் வனிதா மோகன் துவங்கி வைத்தார்.



தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைதிறத்தொழில்களில் வளர்ச்சிக்கழகம் சார்பில் 44 ம் ஆண்டுகாலமாக இந்த விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி, விஜய தசமி, கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற பல்வேறு பண்டிகை காலங்களில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது.



அடுத்த மாதம் அக்டோபர் 2 தேதி துவங்க உள்ள நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் என்ற பெயரில் கண்காட்சி மற்றும் விற்பனையை இந்நிறுவனம் துவங்கி உள்ளது. இக்கண்காட்சி (13.10.2016) வரை தினசரி கலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது.



இக்கண்காட்சியில்,  மரபாச்சி பொம்மைகள், அஷ்டலஷ்மி, தசாவதாரம், ராமர் செட், கல்யாண செட், கடோத்கஜன் செட், பக்த பிரகலாத பட்டாபிஷேக செட், கிருஷ்ண லீலை செட், கோபியர் செட், உரியடி, உலகந்த பெருமாள், ஆழ்வார் செட்,ஆறுபடை வீடு, தக்ஷிணா மூர்த்தி, காமாக்ஷி பூஜை, கிணறு செட், சிங்கராஜா, ஒளவையர், பொங்கல் குதிரை செட், குருவாயூரப்பன், கச்சேரி செட், கீதோபதேசம், கொலு படிகள் மற்றும் பல்வேறு கொலு அமைக்க தேவையான பொருட்கள் இன்னும் ஏராளமானவை விற்பனைக்கு உள்ளன.
இக்கண்காட்சியில், சிறப்பு அம்சமாக ராமாயண வரலாற்று கதையை விளக்கும் வகையில் கொலு பொம்மைகள் மிக சிறப்பான முறையில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. 



இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கு 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி மூலம் ரூ.50 லட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது என மேலாளர் நரேந்திரபோஸ் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...