அதிமுக வேட்பாளர்களை மாற்ற கோரி அதிமுக தொண்டர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்.

கோவை மாநகராட்சி 84வது வார்டு வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கவுன்சிலரான அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக மாநகராட்சி 84 வது வேட்பாளரை மாற்ற கோரி ஏராளமான அதிமுகவினர் இன்று கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கணபதி சுப்பிரமணியம் ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும், தமிழக முதல்வர் பேனரை கிழித்தவர் எனவும் குற்றம்சாட்டிய அவர்கள், கணபதி சுப்பிரமணியம் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.

எனவே 84வது வார்டு வேட்பாளரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும வலியுறுத்திய அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர். ஏற்கனவே இராமநாதபுரம் பகுதியில் 68வது வார்டு, 70வது வார்டு, 71 வார்டு ,73வது வார்டு, 75 வதுவார்டு ஆகியவார்டுகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரு தினங்களாகஅதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 84வது வார்டு அதிமுக வேட்பாளரையும் மாற்றவேண்டும் என கோரி அதிமுகவினர் அதிமுக அலுவலகத்தை மூன்றாவது நாளாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...