தமிழகத்தின் ரேஷன் அரிசி கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.22.54 ஆக உயர்வு

உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தாத தமிழகத்துக்கு ரேஷன் அரிசிக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கான முடிவு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.அதன்படி, ரேஷனில் வழங்கப்படும் அரிசியை தமிழக அரசுகுறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒரு கிலோ 22 ரூபாய் 54 காசுக்கு கொள்முதல் செய்ய நேரிடும். இதுவரை ஒரு கிலோ அரிசியை 8 ரூபாய் 30 காசுக்கு தமிழக அரசு கொள்முதல் செய்து ரேஷனில் இலவசமாக வழங்கி வருகிறது. அதேபோல, 6 ரூபாய் 10 காசுக்கு வாங்கப்பட்டு வந்த ரேஷன் கோதுமைக்கும் தமிழகம் இனி ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் 25 காசு கொள்முதல் விலையாக தர வேண்டியிருக்கும்.

கடந்த 2013ம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதை 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்தின. தமிழகம் மற்றும் கேரளா மட்டுமே உணவுப் பாதுகாப்பு சட்டத்தை இன்னும் நிறைவேற்றவில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழ், வறுமைக் கோட்டுக்கு மேல் என்ற பிரிவுகள் உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் அகற்றப்பட்டு விட்டன. மாறாக, அனைத்து ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் மாதத்துக்கு தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை கிலோ ஒரு ரூபாய் அல்லது 3 ரூபாய்க்கு பெறுவதை உணவுப் பாதுகாப்பு சட்டம் உறுதி செய்கிறது.தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் மற்றும் வறுமைக் கோட்டுக்கு மேல் என வேறுபாடு இல்லாததால், வசதிபடைத்தவர்களும் இலவச அரிசி உள்ளிட்ட சலுகைகளைப் பெறுகின்றனர். இதனால், உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தத் தவறினால், கூடுதல் விலையில் அரிசி வாங்க வேண்டியிருக்கும் என தமிழகம் மற்றும் கேரளாவை மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த மாதம் எச்சரித்திருந்தார்.அதற்கேற்ப, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகம், கேரளாவுக்கு ஒதுக்கப்படும் அரிசி ‌மற்றும் கோதுமையின் விலை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் ரேஷனில் இலவச அரிசிவிநியோகிக்கப்படுவதால், இப்போது ஏற்படவுள்ள கூடுதல் செலவை அரசுஏற்குமா அல்லது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் சேர்ந்து கிலோ 3 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...