தனிமைப்பட்டது பாகிஸ்தான் - சார்க் மாநாடு ரத்து!


டெல்லி: பாகிஸ்தானில் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா உள்பட 4 நாடுகள் புறக்கணித்ததால் சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.நவம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 19வது சார்க் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இதில் சார்க் நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்திலுள்ள யூரி தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதற்கு ஆதரவாக வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன. 

இதனையடுத்து, 4 நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணித்ததால் சார்க் மாநாடு மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைப்படி, சார்க் மாநாடு நடைபெற வேண்டுமானால் அனைத்து உறுப்பு நாடுகளும் அதில் பங்கேற்பது கட்டாயம். இந்தியாவின் பின்னால் பல நாடுகளும் அணி வகுத்து நிற்பது, பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு எடுத்துக்கொண்ட முயற்சியின் முதல் வெற்றி.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...