7 கோடி மோசடி! செருப்பால் அடித்த மக்கள்!


கோவையில் 7 கோடிக்குமேல் மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்டவர்கள் செருப்பால் அடித்ததால் பரபரப்பு.

திருச்சியைச்சேர்ந்த சின்னசாமி கணபதி பகுதியில் மெட்குயுர் என்ற பெயரில் மருந்தகம் நடத்தி வந்தார், திருச்சியை சேர்ந்த பெல் நிறுவனதில் ஒப்பந்த செய்துள்ளதாகவும், அதற்கு பொது மக்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் பத்து மாதத்தில் ஊக்கத்தொகையுடன் ஒரு லட்சத்தி பத்தாயிரமாக வழங்கப்படும் என ஆசை வர்த்தை கூறியதை நம்பி கோவையில் வசிக்கும் 70க்கும் மேற்பட்டவர்கள் ரூபாய் ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை தங்கள் வசதிக்கு ஏற்ப முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் செலுத்திய தொகை குறித்து முதலீடு செய்தவர்கள் கேட்ட போது, பெல் நிறுவனத்துடன் எந்த ஒரு ஓப்பந்தமும் செய்யவில்லை , மகிழ்ச்சியாக வாழ பணம் தேவைப்பட்டதால்தான் உங்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர் .புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சின்னச்சாமி இன்று விசாரணைக்காக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வந்துள்ளார். விசாரணை முடிந்த பின்பு வெளியே வந்த சின்னச்சாமியை சூழ்ந்த முதலீட்டாளர்களில் ஒருவர் செருப்பால் அவரை தாக்கியதால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சின்னசாமியை பத்திரமாக அழைத்து சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது இந்த மோசடியில் சின்னச்சாமியின் குடும்பம் முழுவதும் ஈடுபட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தில் திருச்சியில் வீடு, நிலம்,200 பவுன் நகைகள் மற்றும் கார்கள் அதிக அளவில் வாங்கியிருப்பதாகவும்,அதை மீட்டு தங்களது முதலீட்டு பணத்தை மீட்டுத்தருமாறு காவல் துறையினரிடம் முறையீட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...