சசிக்குமார் கொலைவழக்கில் சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணை ஆரம்பம்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு சிபிசிஜடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த 22ம் தேதியன்று இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்திதொடர்பாளர் சசிக்குமார், அவரது வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதனை அடுத்து கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு வன்முறைசம்பவங்கள் நடைபெற்றன. இந்த கொலைதொடர்பாக துடியலூர் காவல் துறையினர்வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். 

இதனிடையே திருச்சி சரக டிஜஜி அருண், கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ரம்யபாரதி உள்ளிட்டோர் தலைமையில் 8 தனிப்படைகள்அமைக்கப்பட்டு, மர்மநபர்களை தேடி வந்தனர். முன்பகை காரணமாக கொலை நடந்ததா அல்லது மதரீதியான பிரச்சணையில் கொலை நடந்ததா அல்லது வேறு எதேனும் காரணத்தினால் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைமேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற நாளான்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுஇருந்த கண்காணிப்பு கேமராக்களில்பதிவான காட்சிகள் மற்றும் சசிகுமாரின்கைப்பேசி அழைப்புகளை கொண்டும்விசாரணை நடத்தி வந்தனர். 

எனினும்தனிப்படை விசாரணையில் எந்த ஒருமுன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து, இந்தகொலை வழக்கை சிபிசிஜடிக்கு மாற்ற டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து சிபிசிஜடி ஏடிஜிபி கரண்சின்கா சென்னையில் இருந்து கோவை வந்தார். பின்னர் சம்பவம்நடைபெற்ற துடியலூர் பகுதிக்கு சென்ற அவர்கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வுமேற்கொண்டார். பின்னர் துடியலூர் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், வழக்குவிசாரணை குறித்த தகவல்களையும், வழக்கின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம்கேட்டறிந்தார். சிபிசிஐடி காவல் துறையினரின் விசாரணையில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணங்கள் குறித்த விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...