ஒ.எல்.எ (OLA) கால் டாக்ஸி நிறுவனம் மோசடி

பிரபல தனியார் கால் டாக்ஸி நிறுவனமான ஒ.எல்.எ (OLA) கால் டாக்ஸி நிறுவனத்தில் கூடுதல் கமிஷன் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் வரை கடனாளி ஆகிவிட்டதாக குற்றம்சாட்டி கோவையில் 50க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு அலுவலக வாயில் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பிரபல தனியார் கால் டாக்ஸி நிறுவனமான ஒ.எல்.எ கால் டாக்ஸி நிறுவனம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்துடன் இணைந்து காரை வாடகைக்கு இயக்கப்பட்டால் அதிகளவிலான லாபம் பெற்று தரப்படும் என விளம்பரம் செய்ததன் அடிப்படையில் ஏராளமானோர் அந்நிறுவனத்துடன் இணைத்து வாடகைக்கு ஒட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒ.எல்.எ கிளை நிறுவனத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தொழில் நடத்தி வருகின்றனர். 


ஆரம்பத்தில் கிலோ மீட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டு அதில் 15 சதவிகிதம் ஒ.எல்.எ நிறுவனத்திற்கும் 85 சதவிகிதம் காரின் உரிமையாளருக்கும் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 28 சதவிகிதம் நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என அந்நிறுவனம் வற்புறுத்துவதால் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனை தர மறுத்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட காரின் மீட்டரை அந்நிறுவனம் இன்று முடக்கிவிட்டதாக குற்றம்சாட்டி 50க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கடந்த 8 மாதமாக தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க தொகையை ஒ.எல்.எ நிறுவனம் வழங்க வில்லை எனவும், அந்நிறுவனத்தில் இணைந்து காரை இயக்கினால் மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை வருமானம் பெறலாம் என விளம்பரத்தை நம்பி தற்போது ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். தாங்கள் வாங்கிய காருக்கு மாத தவணை கட்டமுடியாமலும், ஒட்டுனருக்கு ஊதியமும் வழங்க முடியவில்லை என குற்றம்சாட்டிய உரிமையாளர்கள், தங்களுக்கு உரிய விளக்கம் நிர்வாகம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...