ஒ.எல்.எ (OLA) கால் டாக்ஸி நிறுவனம் மோசடி

பிரபல தனியார் கால் டாக்ஸி நிறுவனமான ஒ.எல்.எ (OLA) கால் டாக்ஸி நிறுவனத்தில் கூடுதல் கமிஷன் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் வரை கடனாளி ஆகிவிட்டதாக குற்றம்சாட்டி கோவையில் 50க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு அலுவலக வாயில் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பிரபல தனியார் கால் டாக்ஸி நிறுவனமான ஒ.எல்.எ கால் டாக்ஸி நிறுவனம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்துடன் இணைந்து காரை வாடகைக்கு இயக்கப்பட்டால் அதிகளவிலான லாபம் பெற்று தரப்படும் என விளம்பரம் செய்ததன் அடிப்படையில் ஏராளமானோர் அந்நிறுவனத்துடன் இணைத்து வாடகைக்கு ஒட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒ.எல்.எ கிளை நிறுவனத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தொழில் நடத்தி வருகின்றனர். 


ஆரம்பத்தில் கிலோ மீட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டு அதில் 15 சதவிகிதம் ஒ.எல்.எ நிறுவனத்திற்கும் 85 சதவிகிதம் காரின் உரிமையாளருக்கும் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 28 சதவிகிதம் நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என அந்நிறுவனம் வற்புறுத்துவதால் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனை தர மறுத்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட காரின் மீட்டரை அந்நிறுவனம் இன்று முடக்கிவிட்டதாக குற்றம்சாட்டி 50க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கடந்த 8 மாதமாக தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க தொகையை ஒ.எல்.எ நிறுவனம் வழங்க வில்லை எனவும், அந்நிறுவனத்தில் இணைந்து காரை இயக்கினால் மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை வருமானம் பெறலாம் என விளம்பரத்தை நம்பி தற்போது ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். தாங்கள் வாங்கிய காருக்கு மாத தவணை கட்டமுடியாமலும், ஒட்டுனருக்கு ஊதியமும் வழங்க முடியவில்லை என குற்றம்சாட்டிய உரிமையாளர்கள், தங்களுக்கு உரிய விளக்கம் நிர்வாகம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...