சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த  ஐந்து பேர் பலி.




பொள்ளாச்சி கோட்டாம்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் நடராஜ் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார்.  இவரது மகன் திருமுகருகன் மகள் ஜெயலட்சுமி மருமகன் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் குடும்பத்துடன் கடந்த 26 ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்றிரவு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். காரை ஆனந்த கிருஷ்ணன் ஓட்டி வந்துள்ளார்.

இன்று அதிகாலை பொள்ளாச்சி உடுமலை சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி எதிர்பாராத விதமாக விபத்து ஏற்ப்பட்டது. விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆனந்த கிருஷ்ணன் நடராஜ் இருவருவரும் உயிரிழந்தனர். திருமுருகன் ஜெயலட்சுமி  ஸ்ரீநிதி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமணையில் சிகிச்சைபாலனிற்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பிரியா, சிறுவன் தர்ஷன், சிறுமி சாகித்யா உள்ளிட்ட மூன்று பேர் கோவை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை ஓட்டி வந்த ஆனந்த கிருஷணன் தூக்கத்தில் இருந்தபடி, காரை ஓட்டியதால்  இந்த கோர விபத்து ஏற்ப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம்குறித்து கோமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரே குடும்பத்தைசேர்ந்த ஐந்து பேர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...