ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புதிய நோய்க்கு சிகிச்சை

ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வியர்த்துக் கொட்டியது. இருதயவலி ஆனால், இருதய அடைப்பாக தெரியவில்லை. அருகில் உள்ள  ஒரு மருத்துவமைனக்கு அழைத்துச் சென்றனர். அந்த பெண்ணிற்கு அங்கு (இசிஜி) எடுத்தபோது, பல வித்தியசமான மாற்றங்கள் இருந்தன. முதலுதவிக்குப்பின் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால், அவ்வப்போது மூச்சு திணறலும் ஏற்பட்டது.

பின்னர்,  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய நோய் பிரிவு ஆலோசகர் டாக்டர்  நந்தக்குமார் பரிசோதனை செய்தார். இருதயத்தின் பெருந்தமனியில் ஒரு வெடிப்பும், அதை சுற்றிலும் ரத்தம் சேர்ந்திருப்பதை கண்டுபிடித்தார். சிடி ஸ்கேன் செய்தபோது, பெருந்தமணியின் பல பகுதிகளிலும் இந்த வெடிப்பு காணப்பட்டது. இந்த சிறிய அளவிலான வெடிப்புகள் ரத்த நாளங்கள் வரை பரவியிருந்தது. பெருந்தமணியில் ஏற்பட்டிருந்த வெடிப்பால், குடல், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளுக்கு ரத்தம் சென்றிருந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு, டாக்டர் தியாகராஜமூர்த்தி தலைமையில் உதவி மருத்துவர்கள் டாக்டர் அருண், டாக்டர் சஜித், டாக்டர் மேனன் உள்ளிட்ட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இருதயத்தின் பெருந்தமணியில் ஏற்பட்ட வெடிப்பை சரி செய்து ரத்த கசிவை நிறுத்தினர். இதர உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராக செல்ல வழி ஏற்படுத்தினர். இருதய ரத்த நாளத்தில் உள்ள கசிவையும் சரி செய்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய 6.30 மணி நேரம் ஆனது.

அறுவை சிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தாலும், அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பாததால், மோசமாகலாம் என்றே கருதப்பட்டது. ஆனால், படிப்படியாக உடல்நிலை சீராகத் தொடங்கியது. 6 மணிநேரத்துக்குப்பின் மயக்க நிலையிலிருந்து மீண்டார். பின்னர் 10 நாள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். சரியான நேரத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால், குணமடைய முடிந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...