நீலகிரியில் கரடி தாக்கியதில் படுகாயமடைந்தவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி : சோலூர்மட்டம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவர் கரடி தாக்கியதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி : சோலூர்மட்டம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவர் கரடி தாக்கியதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி காவல்பகுதிக்கு உட்பட்ட சோலூர்மட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜ் (48). இவர், கோழிமராடா பகுதியில் அவரது தேயிலை தோட்டத்திற்கு சென்ற போது, அங்கு மறைந்திருந்த கரடி தாக்கியது. இதில், கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட நடராஜை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, சோலூர்மட்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின்னர், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மேல்சிகிக்சை அளித்தனர். 

தொடர்ந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றைக்கரடியைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...