கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி 89-வது வார்டு சுண்டக்காமுத்தூர், வென்னல்நாயுடு தெரு, பள்ளிக்கூடம் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி 89-வது வார்டு சுண்டக்காமுத்தூர், வென்னல்நாயுடு தெரு, பள்ளிக்கூடம் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது, பொது மக்களின் வீடுகளில் நேரில் பார்வையிட்டு குடிநீர் தொடர்ந்து வருகிறதா எனவும், குப்பைகள் அள்ளப்படுகிறதா எனவும், கொசு மருந்து தெளிக்கப்படுகிறதா எனவும் பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும், பேருந்து நிலையம் அருகில் பூங்கா முன்பாக குடிநீர் சுகாதாரமாக கிடைக்கிறதா எனவும், கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் மாநகராட்சி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமீம் கார்டனில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகள் நடைபெறுவதையும், உக்கடம் பெரியகுளத்தின் கரைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சினேகா, துணை ஆணையாளர் ப.காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி, நகர் நல அலுவலர் சந்தோஸ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அப்போது, பொது மக்களின் வீடுகளில் நேரில் பார்வையிட்டு குடிநீர் தொடர்ந்து வருகிறதா எனவும், குப்பைகள் அள்ளப்படுகிறதா எனவும், கொசு மருந்து தெளிக்கப்படுகிறதா எனவும் பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும், பேருந்து நிலையம் அருகில் பூங்கா முன்பாக குடிநீர் சுகாதாரமாக கிடைக்கிறதா எனவும், கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் மாநகராட்சி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமீம் கார்டனில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகள் நடைபெறுவதையும், உக்கடம் பெரியகுளத்தின் கரைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சினேகா, துணை ஆணையாளர் ப.காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி, நகர் நல அலுவலர் சந்தோஸ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.