Exclusive: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவு

கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிக்காக ஒரு ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


கோவை : உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிக்காக ஒரு ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை உள்ளது. இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.216 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி தொடங்கியது.

1.95 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி அருகே கரும்புக்கடை பகுதியில் இருந்து தொடங்கி உக்கடம்-செல்வபுரம் புறவழிச் சாலையில் திரும்பும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இந்த மேம்பாலத்தில் 55 தூண்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக 131 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக உக்கடம் பேருந்து நிலையம் முதல் கரும்புக்கடை வரை ஒரு ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் கூறுகையில், "நிலம் எடுப்பது தொடர்பாக 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும், முதற்கட்டமாக உக்கடம் பேருந்து நிலையம் முதல் கரும்புக்கடை வரை மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது கரும்புக்கடையிலிருந்து ஆத்துப்பாலம் வரையிலும் பணி தொடங்கப்பட உள்ளது." என்றார்.

ஒரு சதுர அடிக்கு ரூபாய் 1,500 (Guide line value) என்ற நில மதிப்பீடு அளவீடு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு அதிலிருந்து இரண்டே கால் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இழப்பீடு வழங்க ரூ 50 கோடி மாநில நெடுஞ்சாலை துறையினர் ஏற்கனவே மாவட்ட வருவாய் துறையிடம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...