கோவையில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

கோவை: கணபதி மற்றும் சூலூர் பகுதிகளில் சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்களிடமிருந்து மொத்தம் 21 பவுன் தங்க சங்கிலிகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை: கணபதி மற்றும் சூலூர் பகுதிகளில் சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்களிடமிருந்து மொத்தம் 21 பவுன் தங்க சங்கிலிகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கணபதி வ.உ.சி நகர் இரண்டாவது வீதியில் வசித்து வருபவர் பெரியசாமி. அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பொன்னுத்தாய் (35). இவர் நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பொன்னுத்தாயின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல், சூலூரை அடுத்த காடம்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (27). ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (21). இவர் சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டெய்லரிங் பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இவர் நேற்று மாலை பயிற்சி முடிந்து காங்கேயம் பகுதியில் உள்ள சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்த்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரேவதி கழுத்தில் இருந்த 11 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். கோவையில் ஒரே நாளில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...