கோவை : தூய்மை கணக்கெடுப்பு பணிகள்-2019 தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் கலந்தாய்வு மேற்கொண்டனர்.
கோவை : தூய்மை கணக்கெடுப்பு பணிகள்-2019 தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில் தூய்மை கணக்கெடுப்பு பணிகளை கோவை மாநகராட்சியில் ஜனவரி 4 முதல் 31 வரை அனைத்து அலுவலர்களும் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இந்திய அளவு தரவரிசையில் கோவை மாநகராட்சி 2016-ல் 18-வது இடமும், 2018-ல் 16-வது இடமும் பிடித்துள்ள நிலையில், தரவரிசையில் மேன்மேலும் முன்னேற்றம் அடையும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் துரிதமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினர்.
மேலும், மாநகராட்சியில் குப்பைகள் சேகரிப்பு பணிகள், தூய்மைப் பணிகள், வீடு வீடாகக் குப்பை சேகரிப்பு, சுகாதாரப் பணியாளர்கள் வருகைப் பதிவேடு, வீடுகளில் மக்கும் குப்பை உரம் தயாரிக்கும் விபரங்கள், கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்தல் பற்றிய விபரங்கள், விழாக்காலங்களில் நடமாடும் கழிப்பறைகள் அமைத்தல், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி கழிப்பறை வசதிகள், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைப் பணிகள், பசுமை அங்காடிகளின் செயல்பாடுகள், மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணிகள் போன்ற பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் செயற்பொறியாளர் ஞானவேல், உதவி ஆணையாளர்கள் தி.ரா.ரவி, ஜே.ரவிக்குமார், செந்தில்குமார் ரத்தினம், கே.ரவிக்குமார், எஸ்.வி.குமார், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஸ்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.