சாலை விபத்துக்களை தவிர்க்க உதவும் 'உயிர்' அமைப்பு : கோவையில் வரும் 27-ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

கோவை : சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்த வரும் 27-ம் தேதி 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.


கோவை : சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்த வரும் 27-ம் தேதி 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்தியாவில் அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆண்டுக்கு 15,000 பேர் தமிழகத்தில் சாலை விபத்துகளினால் மரணிக்கின்றனர். தமிழகத்தில் அதிகம் விபத்துகள் ஏற்படும் மாவட்டங்களில் கோவைக்கு 2-வது இடம். அதில், சாலை விதிகளை மதிக்காமல் நடந்து கொள்வதும், மிதமிஞ்சிய வேகமும் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும்தான் கோவையில் நிகழும் 70 % விபத்துகளுக்கு காரணமாகும்.



இந்த நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளும், சாலை பொறுப்புணர்ச்சியும், போக்குவரத்து நடத்தையும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி விபத்துகளே இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கத்துடன் 'உயிர்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கோவையின் முக்கிய பிரமுகர்கள், முதன்மையான பெருநிறுவனங்கள், தொழிலகங்கள் என பலரும் இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றுகின்றனர். 

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, உயிர் அறக்கட்டளையின் நிர்வாகிகள் சந்தித்து, அமைப்பின் நோக்கத்தையும், செயல்திட்டத்தையும் விளக்கினர். இதைத் தொடர்ந்து, அவர்களின் வேண்டுகோளின்படி, கோவை கொடிசியா வளாகத்தில் 27-ம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 'உயிர்' அமைப்பை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்க இருக்கின்றன. 



தொடக்க விழாவில் உயிர் அமைப்பின் 'உயிர் காக்க புரிந்துணர்வு' ஒப்பந்தத்தில் அரசு அதிகாரிகளுடன் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறுகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...