கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா மனு தாக்கல் செய்துள்ளார்.
கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானாவை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்த போது, அதற்கு சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வெர்மா எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதிலிருந்து இருவருக்குமான பனிப் போர் தொடங்கியது. இருவரும் மத்திய அரசிடம் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
சி.பி.ஐ., உயர்மட்ட அதிகாரிகள் இருவர் இடையேயான இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சி.பி.ஐ., இயக்குநராக நியமித்து மத்திய அரசு நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வெர்மா மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வரும் 26-ம் தேதி விசாரணை நடத்தும் என தெரிகிறது.
கடந்த ஆண்டு சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானாவை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்த போது, அதற்கு சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வெர்மா எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதிலிருந்து இருவருக்குமான பனிப் போர் தொடங்கியது. இருவரும் மத்திய அரசிடம் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
சி.பி.ஐ., உயர்மட்ட அதிகாரிகள் இருவர் இடையேயான இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சி.பி.ஐ., இயக்குநராக நியமித்து மத்திய அரசு நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வெர்மா மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வரும் 26-ம் தேதி விசாரணை நடத்தும் என தெரிகிறது.