நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மரம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மரம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக விபத்துகள் ஏற்படாமல் இருக்க, அபாயகரமான மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல, உதகையில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற கல்லூரி முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, கல்லூரி வளாகத்தில் இருக்கும் மரங்களை அகற்றும் பணியில் மரத்தை அகற்றுபவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று குந்தா பகுதியைச் சேர்ந்த சசி (50) என்பவர் கீழே விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, தீடிரென யாரும் எதிர்பார்க்காத நிலையில், மரம் ஒன்று அவர் மீது விழுந்தது. இதில், மரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட அவரை மீட்க தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சசியை மீட்டனர். ஆனால், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பி1 காவல்நிலைய போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக விபத்துகள் ஏற்படாமல் இருக்க, அபாயகரமான மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல, உதகையில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற கல்லூரி முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, கல்லூரி வளாகத்தில் இருக்கும் மரங்களை அகற்றும் பணியில் மரத்தை அகற்றுபவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று குந்தா பகுதியைச் சேர்ந்த சசி (50) என்பவர் கீழே விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, தீடிரென யாரும் எதிர்பார்க்காத நிலையில், மரம் ஒன்று அவர் மீது விழுந்தது. இதில், மரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட அவரை மீட்க தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சசியை மீட்டனர். ஆனால், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பி1 காவல்நிலைய போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.