கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவிற்கு மாணவர் பலியானதாக வதந்தி : முதல்வர் அசோகன் விளக்கம்

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருவதாக மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருவதாக மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார். 



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னகாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் தமிழரசன் (19) உடுமலையில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பின்னர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழரசன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. 

இந்த நிலையில், இந்த தகவலுக்கு கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது :- கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்ற யாரும் இறக்கவில்லை, எனக் கூறியுள்ளார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...