திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொத்து வரி உயர்த்தப்பட்டது. கடந்த முறை கட்டிய வரியினை விட பல மடங்கு உயர்த்தப்பட்ட வரி நோட்டீஸ் வந்திருந்தது. இதனைக் கண்டித்து பல்வேறு கட்சிகளும் மாநகராட்சியினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் தற்போது வரி உயர்த்தப்பட்டு வரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி அமைப்பு செயல்படாத நிலையில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலான சொத்து வரி உயர்வினை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சொத்து வரி உயர்வினை கைவிட வேண்டும் எனக்கோரி மாநகராட்சியில் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொத்து வரி உயர்த்தப்பட்டது. கடந்த முறை கட்டிய வரியினை விட பல மடங்கு உயர்த்தப்பட்ட வரி நோட்டீஸ் வந்திருந்தது. இதனைக் கண்டித்து பல்வேறு கட்சிகளும் மாநகராட்சியினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் தற்போது வரி உயர்த்தப்பட்டு வரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி அமைப்பு செயல்படாத நிலையில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலான சொத்து வரி உயர்வினை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சொத்து வரி உயர்வினை கைவிட வேண்டும் எனக்கோரி மாநகராட்சியில் கோரிக்கை மனுவும் அளித்தனர்.