கோவை: சமூக விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு சிங்காநல்லூர் குளக்கரையில் நான்கு சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவை: சமூக விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு சிங்காநல்லூர் குளக்கரையில் நான்கு சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சிங்காநல்லூர் குளக்கரையில் சூழலியலை காக்கும் பொருட்டும், சமூக விரோத செயல்களை தடுக்கும் விதமாகவும், வேட்டைகளை தடுக்கவும் நான்கு சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் இரண்டு காமிராக்கள் குளக்கரை அருகே உள்ள சோதனைச் சாவடியிலும், இரண்டு காமிராக்கள் குளக்கரையின் ஓரத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பட்டு அறையும் அங்கேயே அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பட்டு அறையினுள் இருக்கும் டி.வி-யின் மூலம் காமிராவில் பதிவாகும் காட்சிகளை காண முடியும்.

இது குறித்து கியூப் அமைப்பின் தன்னார்வலர்கள் கூறுகையில், "குளத்தின் இயற்கை சூழலை பாதுகாக்க தொடர்ந்து கண்காணிக்க மாநகராட்சியுடன் இணைந்து இந்த காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குளத்தின் கரையில் ஓரத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த இது உதவும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குளத்தில் தேங்கும் மது பாட்டில்களை தன்னார்வலர்கள் அகற்றி வருகின்றனர். ஆனால், மது அருந்துபவர்களையும், பறவைகளை வேட்டையாடுபவர்களையும் எதுவும் செய்ய இயலவில்லை. இதனால் குளத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்தது. தற்போது மொத்த குளமும் கண்காணிப்பில் உள்ளது." என்றனர்.
கோவையில் முதன்முறையாக சி.சி.டி.வி காமிரா நிறுவப்பட்ட குளம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்காநல்லூர் குளக்கரையில் சூழலியலை காக்கும் பொருட்டும், சமூக விரோத செயல்களை தடுக்கும் விதமாகவும், வேட்டைகளை தடுக்கவும் நான்கு சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் இரண்டு காமிராக்கள் குளக்கரை அருகே உள்ள சோதனைச் சாவடியிலும், இரண்டு காமிராக்கள் குளக்கரையின் ஓரத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பட்டு அறையும் அங்கேயே அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பட்டு அறையினுள் இருக்கும் டி.வி-யின் மூலம் காமிராவில் பதிவாகும் காட்சிகளை காண முடியும்.

இது குறித்து கியூப் அமைப்பின் தன்னார்வலர்கள் கூறுகையில், "குளத்தின் இயற்கை சூழலை பாதுகாக்க தொடர்ந்து கண்காணிக்க மாநகராட்சியுடன் இணைந்து இந்த காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குளத்தின் கரையில் ஓரத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த இது உதவும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குளத்தில் தேங்கும் மது பாட்டில்களை தன்னார்வலர்கள் அகற்றி வருகின்றனர். ஆனால், மது அருந்துபவர்களையும், பறவைகளை வேட்டையாடுபவர்களையும் எதுவும் செய்ய இயலவில்லை. இதனால் குளத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்தது. தற்போது மொத்த குளமும் கண்காணிப்பில் உள்ளது." என்றனர்.
கோவையில் முதன்முறையாக சி.சி.டி.வி காமிரா நிறுவப்பட்ட குளம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.