கோவை : தமிழ்நாடு தொலைத் தொடர்பு துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் மின்னணு பணப்பரிவர்த்தனை மேளா பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கோவை : தமிழ்நாடு தொலைத் தொடர்பு துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் மின்னணு பணப்பரிவர்த்தனை மேளா பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மின்னணு பணப்பரிவர்த்தனை மேளா பற்றிய விழிப்புணர்வு பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது :- கோவை மாநகராட்சியில் இணையதளத்தின் வாயிலாக மின்னணு பணப்பரிவர்த்தனைகள் செயல்படுத்திட பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக மின்னணு பணப்பரிவர்த்தனைகளை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் எளிய முறையில் மாநகராட்சியின் வருவாய் உயர்வதற்கு வழிவகுக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சில்லறை விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினர். மேலும், மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மின்னணு பணப்பரிவர்த்தனையின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் இப்பயிற்சி வகுப்பில் விளக்கப்பட்டது. கனரா வங்கியின் சார்பாகஎஸ்.வெங்கட்ராமன், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மேலாளர் சத்யபிரபு, முருகன் என்.பி.சி.ஐ., சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர்கள் ஏ.திருமூர்த்தி, சங்கரநாராயணன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
மின்னணு பணப்பரிவர்த்தனை மேளா பற்றிய விழிப்புணர்வு பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது :- கோவை மாநகராட்சியில் இணையதளத்தின் வாயிலாக மின்னணு பணப்பரிவர்த்தனைகள் செயல்படுத்திட பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக மின்னணு பணப்பரிவர்த்தனைகளை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் எளிய முறையில் மாநகராட்சியின் வருவாய் உயர்வதற்கு வழிவகுக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சில்லறை விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினர். மேலும், மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மின்னணு பணப்பரிவர்த்தனையின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் இப்பயிற்சி வகுப்பில் விளக்கப்பட்டது. கனரா வங்கியின் சார்பாகஎஸ்.வெங்கட்ராமன், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மேலாளர் சத்யபிரபு, முருகன் என்.பி.சி.ஐ., சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர்கள் ஏ.திருமூர்த்தி, சங்கரநாராயணன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.