திருப்பூரில் நீதிபதியை அவமதித்த காவல் துணை கண்காணிப்பாளருக்கு ஒருநாள் நீதிமன்றக்காவல்

திருப்பூர் : திருப்பூரில் நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதித்தாகக் கூறி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு ஒருநாள் நீதிமன்றக்காவல் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதித்தாகக் கூறி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு ஒருநாள் நீதிமன்றக்காவல் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் காவல் துணைக்கண்காணிப்பாளராக இருப்பவர் பரமசாமி. இவர், கடந்த 9-ம் தேதி வழக்கு ஒன்றிற்காக அரசு தரப்பு சாட்சியாக ஆஜராகியுள்ளார். அப்போது, ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து நீதிபதி கேட்ட போது, நீதிபதியையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், அதனை திருத்திக்கொள்ள அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டபோது அவரையும் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. 



நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், செயல்பட்டதற்கான விளக்கத்தை இன்றைய தினம் துணைக்கண்காணிப்பாளர் பரமசாமி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். 



அதனடிப்படையில், நேரில் ஆஜரான அவரை இன்றைய தினம் முழுவதும் நீதிமன்ற காவலில் இருக்கும்படி மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, இன்றைய தினம் முழுவதும் நீதிமன்றத்திலேயே காத்திருந்த துணைக்கண்காணிப்பாளர் நீதிமன்ற அலுவல் நேரம் முடிந்த பின்பே சென்றார். மாவட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் ஒருவரே நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதற்காக ஒரு நாள் நீதிமன்றக்காவல் தண்டனை பெற்ற சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...