கோவை: வாலங்குளத்தில் நோய் வாய்ப்பட்டு கிடந்த பெலிக்கன் (கூழைக்கடா) பறவையை மீட்ட தன்னார்வலர்கள் அதனை சிகிச்சைக்காக வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கோவை : வாலங்குளத்தில் நோய் வாய்ப்பட்டு கிடந்த பெலிக்கன் (கூழைக்கடா) பறவையை மீட்ட தன்னார்வலர்கள் அதனை சிகிச்சைக்காக வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "பறவை குளத்தில் நோய் வாய்ப்பட்டு கிடப்பதாக அங்கிருந்த மீனவர் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல் கொடுத்தார். அதன்பேரில், நாங்கள் அங்க சென்று பறவையை மீட்டு டவுன்ஹாலில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

அங்கிருந்து பறவை வ.உ.சி பூங்காவுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பறவை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "பெலிக்கன் பறவை தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. அதற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பறவையின் நோய்க்கான காரணம் இன்னும் தெரிவில்லை." என்றனர்.

இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "பறவை குளத்தில் நோய் வாய்ப்பட்டு கிடப்பதாக அங்கிருந்த மீனவர் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல் கொடுத்தார். அதன்பேரில், நாங்கள் அங்க சென்று பறவையை மீட்டு டவுன்ஹாலில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

அங்கிருந்து பறவை வ.உ.சி பூங்காவுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பறவை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "பெலிக்கன் பறவை தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. அதற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பறவையின் நோய்க்கான காரணம் இன்னும் தெரிவில்லை." என்றனர்.
