பணியின் போது மரணித்த காவலர்களுக்கு வீரவணக்கம் : திருப்பூர், கோவையில் தோட்டாக்கள் முழங்க அஞ்சலி

திருப்பூர்: பணியின் போது வீர மரணம் அடைந்த பல்வேறு துறைகளை சேர்ந்த காவலர்களுக்கு திருப்பூர் மற்றும் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் வீரவணக்க இன்று செலுத்தப்பட்டது.


திருப்பூர்: பணியின் போது வீர மரணம் அடைந்த பல்வேறு துறைகளை சேர்ந்த காவலர்களுக்கு திருப்பூர் மற்றும் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் வீரவணக்க இன்று செலுத்தப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியின் போது வீரமரணம் அடைந்த 414 காவலர்களுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 21-ம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் ஞாயிறன்று காலை வீரவணக்க நாள் நிகழ்வு காவல் ஆணையர் மனோகர் தலைமையில் நடைபெற்றது.



இதில் பணியின் போது மரணித்த 414 காவலர்களுக்கு அனைத்து பிரிவுகளை சேர்ந்த காவல்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மரியாதை நிமித்தமாக 54 குண்டுகள் முழுங்க வீரவணக்கம் செலுத்தினர். இதில், மாநகர துணை காவல் ஆணையர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உள்ளிட்ட மாநகர் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகளும் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.

இதே போல், கோவை மாநகர காவல்துறையில் பணியின் போது மரணமடைந்த இரண்டு காவலர்கள் உள்ளிட்ட 414 வீரர்களுக்கான வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு மண்டபம் முன்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தலைமையில் நடைபெற்றது.



இதில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஐ.கே கோவிந்த், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் 30 பேர் பங்கேற்றிருந்தனர்.

முன்னதாக காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு தூண் மீது துப்பாக்கி மற்றும் தொப்பி ஆகியவை வைக்கப்பட்டு காவலர்களின் அணிவகுப்புடன் அவற்றிற்கு மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், வானத்தை நோக்கி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மூன்று முறை தலா 20 குண்டுகள் வீதம் 60 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

இதை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...